PublicNewsTv- கணவன் மனைவி, சண்டையினால் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்!!??.

PublicNewsTv- கணவன் மனைவி, சண்டையினால் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்!!??.

PUBLISHED:10-Nov-2017

இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அவரது கணவரின் கைப்பேசியை எடுத்து சோதனை செய்திருக்கிறார். அதில் அவரது கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகிறார்.

விமான ஊழியர்கள் எவ்வளவு முயற்சித்து கணவன் - மனைவி சண்டை முடிவுக்கு வரவில்லை. இதனையடுத்து அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு கணவன் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் அனைவரும்  இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் அப்பெண் சமாதானம் அடைந்த பிறகு வேறொரு விமானத்தில் அந்தக் குடும்பத்தினர் கோலாலம்பூர் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இது தொடர்பான எந்த தகவலையும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கூற மறுத்துவிட்டது.




Recommended For You