PUBLIC NEWS TV - ஆபாச இணையதளத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..!

PUBLIC NEWS TV - ஆபாச இணையதளத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..!

PUBLISHED:01-Nov-2019

உலகம் முழுவதும் இணைய தளங்களில் பாலியல் சார்ந்த கிளர்ச்சியூட்டக்கூடிய விஷயங்கள் அடங்கிய பக்கங்களை பார்வையிடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

ஆண்கள் அளவுக்கு பெண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு வருகிறது.

இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் அப்படி பார்ப்பவர்களில் 65 சதவீதம் பேர் தங்களுடைய மனதளவிலும், குடும்ப வாழ்க்கையிலும் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். வீண் சந்தேகம், அவநம்பிக்கை, திருப்தியின்மை போன்ற பலவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள்.

குடும்ப வாழ்க்கையில் இணைய இருப்பவர்கள் மண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, இணைந்தவர்கள் சந்தேக நோய், திருப்தியின்மையால் அவதிப்படுவது, திருமணத்துக்கு வெளியே புதிய உறவுகளை உருவாக்கி கொள்ள நினைப்பது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனுடைய பின்விளைவுகளை ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் செய்திகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு முகூர்த்த தேதி நெருங்கும் நேரத்தில் திருமணத்தை நிறுத்துதல், தவறான உறவுகளை ஏற்படுத்துதல், கணவன் - மனைவி பிரிந்து செல்வது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன.

திருமணமான 24 மணி நேரத்தில் புதுமண தம்பதியர் பிரிந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. முதலிரவு அன்று கணவன் கேட்ட கேள்வி மனைவியை விரக்திக்குள்ளாக்கி அன்றே பிரியும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த சம்பவத்தை பார்ப்போம்!

கணவன் மனைவியிடம், ‘‘நான் ஒரு கேள்வி கேட்டால் தவறாக நினைக்க மாட்டாயே?’’ என்றிருக்கிறார்.

மனைவியும், ‘‘தயங்காமல் கேளுங்கள்.

எதுவும் நினைக்க மாட்டேன்” என்றிருக்கிறாள்.

அதுவரை தயங்கிக் கொண்டிருந்த கணவன், “நான் நான்கு நாட்களுக்கு முன்பு செக்ஸ் வீடியோ ஒன்று பார்த்தேன்.

அதில் இருந்த பெண் உன்னை மாதிரியே அழகாக இருந்தாள்’’ என்றிருக்கிறார்.

உடனே மனைவி, ‘‘அது நான் தான்’’ என்று கூற, கணவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘‘நீ சும்மா விளையாட்டுக்குத்தானே சொல்கிறாய்?’’

என்று கேட்க மனைவியோ, ‘‘என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லையா அது நானே தான்.

இன்னுமா நீங்கள் நம்பவில்லை’’ என்று சொல்லி இருக்கிறாள்.

அதை கேட்டு கணவன் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்.

மீண்டும் மீண்டும் அதுபற்றியே கேட்டு இரவு முழுக்க மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அன்று அவர்களுக்கு முதலிரவு நடக்கவில்லை.

மறுநாள் அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

‘செக்ஸ் வீடியோ பார்த்து விட்டு அதில் இருப்பவள் என்னை போல் இருப்பதாக சொல்கிறார்.

அதில் இருப்பவளுடன் என்னை ஒப்பிட்டும் பேசுகிறார்.

அப்படிப்பட்ட வீடியோ பார்ப்பதுதான் அவருடைய பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.

இத்தகைய சுபாவமும் சந்தேக எண்ணமும் கொண்டிருப்பவருடன் என்னால் வாழ முடியாது’ என்று கூறிவிட்டாள்.

திருமணம் நடந்த 24 மணி நேரத்திற்குள் அவர்களுடைய இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

‘‘இணையதள செக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிப்பது குடும்பத்துக்குள் எந்த மாதிரியான பிரச்சினைகளை உருவாக்குகிறது’’ என்று திருமண ஜோடிகளிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.

இணையதளங்கள், சமூகவலைத்தளங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

70 சதவீதம் பேர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், 30 சதவீதம் பேர் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இணையதள காட்சிகள் உங்கள் பாலியல் உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

69 சதவீதம் பேர் தாம்பத்திய வாழ்க்கைக்கு சுவையூட்டி இருக்கிறது என்றிருக்கிறார்கள். 27 சதவீதம் பேர் அதனால் தங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

4 சதவீதம் பேர் எங்கள் வாழ்க்கையே அதோடு சீரழிந்துவிட்டது என்று வேதனையோடு சொல்லி இருக்கிறார்கள்.

‘சைபர் செக்ஸ்’ புதிய தலைமுறையை திசைமாறி செல்ல வைத்துவிடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

அது ஓரளவுக்கு உண்மைதான். அவர்கள் வாழ்க்கை திசை மாறி சென்றுவிடும் என்பது 49 சதவீதம் பேரின் கருத்தாக இருக்கிறது.

அது இளைய தலைமுறையை மிகவும் தப்பான பாதைக்கு அழைத்து சென்றுவிடும் என்று 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

4 சதவீதம் பேர் எந்த தொந்தரவும் ஏற்படாது என்றிருக்கிறார்கள். 12 சதவீதம் பேர் எல்லா எல்லைகளையும் தாண்டி மனிதர்களை எங்கோ கொண்டு போய்விட்டுவிடும்.

வாழ்க்கையையே பாழாக்கிவிடும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

சைபர் செக்ஸ் இணைய தொடர்புகளில் இருப்பவர்களில் ஆண், பெண் வித்தியாசம் உண்டா?




Recommended For You