ஸ்ரீ தேவி மரணத்தில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை இந்தியா கொண்டுவர தாமதம் ஆகும் என தெரியவந்துள்ளது.
ஸ்ரீ தேவி மரணம் குறித்து கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு தான் அவர் இறந்துள்ளார் என முதலில் செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, உடற்கூறு ஆய்வில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளதாகவும்,அதனால் போதையில் தடுமாறி குளியலறை தொட்டியில் மூழ்கி விழுந்து இறந்துள்ளார் என ஐக்கிய அரபு அமீரகம் சான்றிதழ் வழங்கியது
இந்நிலையில்,எம்பாப்மிங் செய்து ஸ்ரீ தேவி யின் உடலை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்யப் பட்ட நிலையில், பல சந்தேகம் வலுத்த காரணத்தினால்,ஸ்ரீ தேவியின கணவர் போனி கபூரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போனி கபூர் ஏன் இந்தியா வந்து மீண்டும் துபாய் திரும்ப வேண்டும் ..? ஸ்ரீ தேவி இறப்பிற்கு முன் அவர் யாரிடமெல்லாம் போன் பேசி உள்ளார் என பல கோணத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது
விசாரணையின் முடிவில் போனி கபூர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே...திடுக்கிடும் தகவல் ஒன்று வாட்ஸ்அப் மூலம் பரவுகிறது...போனி கபூர் நண்பருடன் ஸ்ரீ தேவி வாக்குவாதம் செய்துள்ளதாகவும், ஏதோ அங்கே அவர்களுடன் சில பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த தகவல் அங்குள்ள சில முக்கிய நபர்களுக்கு தெரியவர,துபாயில் உள்ள ஒரு முக்கிய புள்ளி,பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தகவல் சொல்ல,அவர் உடனே ட்வீட் செய்துள்ளார்....." ஏதோ தப்பாக தெரிகிறது.. மனம் பதறுகிறது என"...இவ்வாறு கூறப்படுகிறது
பின்னர் தான் செய்தி வெளியானது ஸ்ரீ தேவி மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில்..
இது தொடர்பாக, விசாரணை வளையத்திற்குள் உள்ள போனி கபூரை விரைவில் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது