PUBLICNEWSTV -சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த இருவரை கடித்துக் குதறி விரட்டியடித்த நாய்!

PUBLICNEWSTV -சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த இருவரை கடித்துக் குதறி விரட்டியடித்த நாய்!

PUBLISHED:22-Aug-2018

 மத்திய பிரதேசத்தில் சிறுமியை, இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது, வளர்ப்பு நாய் கடித்துக் குதறி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகே கரீலா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் கொசு அதிகமாக இருந்ததால் புகை மூட்டம் போட எண்ணியுள்ளார்.

இதற்காக வைக்கோல் எடுத்து வருவதற்காக அவர் வெளியே சென்றுள்ளார்.

அப்போது இரு இளைஞர்கள் அந்தச் சிறுமியின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்றனர்.

அருகில் இருந்த குடிசைப் பகுதிக்கு சிறுமியை தூக்கிச் சென்று அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

அப்போது சிறுமி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அவர் வளர்த்த நாய் அங்கு ஓடோடி வந்தது. இளைஞர்கள் இருவரையும் கடிக்க பாய்ந்தது.

ஆனால் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் அந்த நாயை தாக்க முயற்சித்த போதும்.

எனினும் அந்த நாய் ஆவேசமாக அவர்கள் இருவரையும் கடித்துக் குதறியது.

இதனால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் விரைந்து ஒடி வந்தனர்.

அதற்குள் அந்தச் சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை நோக்கி ஓடினார்.

அங்கு கூட்டம் கூடியதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

பின்னர், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் புனித் மற்றும் ரிஷூ எனத் தெரிய வந்துள்ளது




Recommended For You