உத்ரபிதேசம்:-
கள்ளத்தொடர்பு புகார் பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட இளம் சாமியார்!!
உத்ரபிரதேசத்தில் தன் மீது கள்ள தொடர்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் மனம் உடைந்த சாமியார் ஒருவர் தனது பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இளம் சாமியார்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காம்ஸின் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் மாதானி பாபா (வயது 28). இளம் சாமியாராக இவருக்கும், இவரின் உறவினர் பெண் ஒருவருக்கும் கள்ள தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுவந்தது.
விபரீத முடிவு:
இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சாமியார், நவராத்திரி விழாவின் போது தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டார். ரத்தம் தெறிக்க வெள்ளத்தில் கடந்த அவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை:
பின் அந்த சாமியாரை மேல்சிகிச்சைக்காக பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
சாமியார் பேட்டி:
சிகிச்சை பெற்று வரும் சாமியார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''நான் ஆசிரமம் ஒன்று கட்ட திட்டமிட்டேன். இதனை விரும்பாத சிலர், தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் என்னை ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி பேசுகின்றனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்