திமுக வேட்பாளரை ஆதரித்து சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன் வாக்கு சேகரிப்பு..!
சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ருக்குமணி ரவிச்சந்திரன் அவர்களை ஆதரித்து சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.