PublicNewsTv-மழை நீர் தேங்கிய பள்ளத்தில் 5 வயது சிறுவன் மூழ்கி உயிரிழப்பு!?.

PublicNewsTv-மழை நீர் தேங்கிய பள்ளத்தில் 5 வயது சிறுவன் மூழ்கி உயிரிழப்பு!?.

PUBLISHED:27-Nov-2017

திருவள்ளூர்;-

திருவொற்றியூர் கன்னியப்பகிராமணி 2-வது தெருவைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரின் மனைவி ஜமுனா. இவர்களது மகன் ரக்சித் வயது (5). தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வந்தான்.

நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மதியம் தாய் ஜமுனாவுடன் ரக்சித் படுத்துத் தூங்கியுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஜமுனா கண் விழித்து பார்த்தபோது ரக்சித்தைக் காணவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வீட்டின் பின்புறம் சி.பி.சி.எல். நிறுவனம் குழாய் பதிக்க தோண்டியிருந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையால் மழைநீர் நிரம்பி இருந்துள்ளது.

அதில் சிறுவனைத் தேடியபோது அவன் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான்.

தகவல் அறிந்து திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். சிறுவன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனை  தொடர்ந்து தீவிர  விசாரணை நடந்து வருகிறனர்.




Recommended For You