PUBLICNEWSTV-மாணவர் தலை துண்டித்து நிலையில் சடலம் ரயில்வே போலீஸாரால் கொலையா.

PUBLICNEWSTV-மாணவர் தலை துண்டித்து நிலையில் சடலம் ரயில்வே போலீஸாரால் கொலையா.

PUBLISHED:27-Aug-2018

திருவள்ளூர் அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரவியின் மகன் மௌலீஸ்வரன்.

இவர் பொன்னேரி அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

நேற்று முனதினம் இரவு அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மௌலீஸ்வரனை, கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மௌலீஸ்வரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை அழைத்துச் செல்லும்படி மாணவரின் பெற்றோருக்கு ஆர்.பி.எப் அதிகாரிகள் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

மாணவரின் பெற்றோர் அங்கு சென்றபோது, கும்மிடிப்பூண்டி- எளாவூர் இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மௌலீஸ்வரனின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கியதில்தான் மௌலீஸ்வரன் உயிரிழந்ததாகவும், சடலத்தை தண்டவாளத்தில் வீசிவிட்டு நாடகமாடுவதாகவும் ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது உறவினர்கள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.




Recommended For You