PublicNewsTv- நகராட்சி ஆணையர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸார் தீவிர சோதனை.!?.

PublicNewsTv- நகராட்சி ஆணையர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸார் தீவிர சோதனை.!?.

PUBLISHED:23-Nov-2017

காஞ்சிபுரம்;-

பொதுமக்கள் புகாரின் பேரில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தாருக்கு சொந்தமான காஞ்சிபுரம் மற்றும் சென்னை துரைபாக்கத்தில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள நகராட்சி ஆணையர் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஓழிப்பு போலீஸ் டி.எஸ்.பி சிவபாதசேகரன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஊட்டியில் பணிபுரிந்த போது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், தற்போது பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பில் பணம் பெற்றதாக வந்த புகார் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Recommended For You