PUBLIC NEWS TV - அத்திவரதர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை 300 ரூபாய் கட்டணத்தில் புதிய தரிசன திட்டம்..!

PUBLIC NEWS TV - அத்திவரதர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை 300 ரூபாய் கட்டணத்தில் புதிய தரிசன திட்டம்..!

PUBLISHED:21-Jul-2019

காஞ்சீபுரம்:-

தேதி - 20-7-2019

20வது நாளான இன்று, அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு நிற பட்டாடையுடன்,

பச்சை நிறத்தில் அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு செண்பக பூக்களுடன்,

நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு சுவாமியின் திருமார்பு முழுவதும் மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

சுவாமியின் இடது கையில் சங்கும், வலது கையில் திருச்சக்கரமும் ஏந்தியவாறு பக்தர்களுக்கு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ரங்கசாமி குளம் வரை ஏராளமான பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதால் பஸ்கள் மற்றும் ஸ்மால் பஸ்களை இயக்க முடியவில்லை.

இதையடுத்து ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையில் இருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரில் இருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள்.

பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்தில் இருந்து வசந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 6 மணி நேரம் ஆகிறது.

குறைந்தபட்சமாக 3½ மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

அனுமதி சீட்டு இல்லாதவர்களை கண்டிப்பாக வி.ஐ.பி. தரிசன வரிசையில் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசை தற்போது சீராகியுள்ளது.

வி.ஐ.பி. தரிசன வரிசையில் செல்பவர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

வி.ஐ.பி. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை.

இதன் காரணமாக வி.ஐ.பி. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வி.ஐ.பி. பக்தர்கள் மாலை 6 மணி வரையே அத்திவரதரை தரிசிக்க முடியும்.

மாலை 6 மணிக்கு மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

அதற்கு பதிலாக ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரூ.300 கட்டணத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்று அதிவிரைவாக அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.

இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்ததால் அத்திவரதரை தரிசிக்க முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

நெரிசல் காரணமாக உடல் தளர்ந்த முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.




Recommended For You