PUBLIC NEWS TV- விமானத்தில் நூதனமாக பல லட்சம் ரூபாய் தங்கம் கடத்தி வந்த நபர் கைது!?.

PUBLIC NEWS TV- விமானத்தில் நூதனமாக பல லட்சம் ரூபாய் தங்கம் கடத்தி வந்த நபர் கைது!?.

PUBLISHED:27-Nov-2017

கோவை;-

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் நூதனமாக 820 கிராம் தங்கம் கடத்தி வந்த கேரளத்தைச் சேர்ந்த நபரிடம் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரக நகரமான சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அதில், தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பதில் அளித்த நபரிடம் விசாரித்தனர்.

அதில், கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த அஸ்டாஃப் (37) என்பதும், அவர் வைத்திருந்த 5 கத்திகளுக்குள் 119 தங்கக் குச்சிகள் இருப்பதும் தெரியவந்தது. சுமார் 820 கிராம் அளவில் தீக்குச்சி வடிவில் செய்யப்பட்ட இந்த தங்கக் குச்சிகளின் மதிப்பு ரூ.24.48 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்போது வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




Recommended For You