PUBLIC NEWS TV-மாவட்ட ஆட்சியரை தாக்க முயற்சி செய்த மூவர் கைது.

PUBLIC NEWS TV-மாவட்ட ஆட்சியரை தாக்க முயற்சி செய்த மூவர் கைது.

PUBLISHED:17-Sep-2017

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி இரு தினங்களுக்கு முன்பு  தனது குடியிருப்பு எதிரே நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர், குடியிருப்பு உள்ளே சென்றபோது, இருசக்கர வாகனத்தில்  அங்கு வந்த மூன்று நபர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தட்டிக் கேட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை மூவரும் தாக்க முயற்சித்துள்ளனர் இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ஆட்சியர் குடியிருப்பு அலுவலக ஊழியர்களும் மூவரையும் தடுத்து நிறுத்திப் பிடித்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மூவரும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மணிகண்டன், சிவா ஆகியோர் மது போதையில் இருந்த அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆட்சியரை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் .




Recommended For You