கிருஷ்ணகிரி மாட்டம் ஓசூர் நகராட்சியில் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள்,
ஓசூர் நகராட்சியில், ரூ. 50.50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள்
இதனை தொடர்ந்து ஓசூர் நகராட்சியில் மட்டும் மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்.
ஓசூர் நகராட்சியில், ரூ.1 கோடி 56 லட்சம் மதிப்பில் 4 - பூங்காக்கள் மற்றும் ரூ. 42 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலை கட்டிடம் என 5 பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
ஓசூர் நகராட்சிக்குட்பட்ட 13வது வார்டு அப்துல்கலாம் நகரில் ரூ. 35.50 லட்சம் மதிப்பிலும், 25வது வார்டு பிருந்தாவன் நகரில் ரூ. 43.50 லட்சம் மதிப்பிலும், 33வது வார்டு தளி அட்கோ பகுதியில் ரூ.32.50 லட்சம் மதிப்பிலும், 73வது வார்டு ராயக்கோட்டை அட்கோ பகுதியில் ரூ.44.50 லட்சம் மதிப்பில் என ரூ. 1 கோடியே 56 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து சீத்தாராம் நகர் பகுதியில் ரூ. 42 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவலப்பள்ளி அட்கோ, பாகலுர் அட்கோ, தளி சாலை சிறுவர் பூங்கா, தமிழ்நாடு வீட்டு வசதி பகுதி 9 வாரியம், பகுதி 10 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் பேருந்து நிலையம், மேற்கு பகுதி, கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் ரூ. 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஓசூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ரூ. 2 -க்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து அந்த பகுதி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அவர்கள் ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் வரும் காலங்களில் நிறைய பணிகளை செய்வதற்கு தேவையான நிதி தமிழக அரசிடமிருந்து ஓசூர் நகராட்சிக்கு வரும். பொதுமக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
ஆவலப்பள்ளி அட்கோ, வெங்கடேஸ்வரா லேஅவுட், சப்தகிரிநகர், பிருந்தாவன் நகர், நியூ ஏ.எஸ்.டி. அட்கோ, ஆகிய 5 - இடங்களில் ரூ. 2 கோடியே 7 லட்சம் மதிப்பில் பூங்காகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள பூங்காகளை இளைநர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டு மேலும் பூங்காககள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றியுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சாலைவசதி மற்றும் வீட்டுமனை பட்டாக்கள், பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகர பகுதியில் வசிக்கும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓசூர் நகராட்சி ஆணையர் செந்தில் முருகன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் திரு. கண்ணன், நாராயணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வாசு, ரமேஷ், சரஸ்வதி, அசோக்ரெட்டி, முரளி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சோக்காடி ராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவேந்திரன், பிரபாகர்ரெட்டி, ஜெயபிரகாஷ், பால்நாராயணன், வி.டி.ஜெயராமன்,உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.