PUBLIC NEWS TV-ஓசூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது சிறுவன் உயிரிழப்பு.

PUBLIC NEWS TV-ஓசூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது சிறுவன் உயிரிழப்பு.

PUBLISHED:15-Oct-2017

 

ஓசூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது சிறுவன் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி வட்டம், ஒசாஅள்ளி பஞ்சாயத்திர்க்குட்பட்ட கூட்டூர் கிராமத்தில்  கோவிந்தராஜ் பெருமா தம்பதிகளின் மகன் வினோத்குமார் (வயது-5)

அவருக்கு கடந்த மூன்று திணங்களாக காய்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சிறுவனை சூளகிரி மருத்துவமணைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் சாதரண காச்சல் என ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்பியதாகவும் இதற்குயிடையில் சிறுவனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாக,  கிருஷ்ணகிரி மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சிறுவன் வினோத்குமாரை,

தருமபுரி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்ததில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பயன்யின்றி  சிறுவன் உயிரிழந்ததால் ஆம்பூலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும்.

இது  குறித்து கிராம மக்கள் கூறுகையில் அடிப்படை வசதி இல்லாத எங்கள் கிராமத்தில் திடீர் என காய்ச்சல் ஏற்ப்பட்டால்16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  சூளகிரிக்கு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது என்றும்,

ஆரம்ப சுகாதார நிலையம் எங்கள் பஞ்சாயத்தில் இருந்திருந்தால் இந்த குழந்தை உயிர்போயிருக்காது ஆகவே எங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும்  என்று கூட்டூர் கிராமத்தின் பொதுமக்கள் தமிழக அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திர்க்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.




Recommended For You