ஓசூரில் சுகாதார சீர்கேடு அச்சத்தில் பெதுக்மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் குப்பை மற்றும் கோழி கழிவுகள் கொட்டபடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பொத்திக்கொண்டு தங்களது குறைகளை கடவுளிடம் வேண்டி வணங்கி செல்கின்ற சூழல் ஏற்படுகிறது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் பலர் குறைகளை தீர்க்கும் கோட்டை மாரியம்மன் கோவிலைச் சுற்றி அசுத்தமாக உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது நகராட்சி கண்டுகொள்வதில்லை எனவும் பக்தர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவிவருகிறது என்று கூறினார் .
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா நகராட்சி என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவுள்ளது.