PUBLIC NEWS TV- அரசு பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது!?.

PUBLIC NEWS TV- அரசு பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது!?.

PUBLISHED:31-Oct-2017

கிருஷ்ணகிரி:- 

அரசு பேருந்தில் பெங்களூரில் இருந்து கடலூருக்கு கடத்தப்பட்ட ரூபாய்  ஒரு லட்சத்து  60 ஆயிரம் மதிப்புள்ள ஆறு  மூட்டை குட்கா  ஓசூர் பேருந்து நிலையத்தில் பறிமுதல் ஒருவர் கைது.

தமிழக அரசு பேருந்தில் பெங்களூரில் இருந்து மாயவரத்திற்கு கடத்திய ஆறு மூட்டை தடை செய்யப்பட்ட   குட்கா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். 

கடலூர் மாவட்டத்தை சேர்நத் சண்முகம்  என்பவர் தடை செய்யபப்ட்ட குட்காவை  பெங்களூரில் இருந்து கடலூருக்கு ஆறு மூட்டைகளை   அரசு பேருந்தில்  கடத்த முயன்றுள்ளர், அப்போது பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி இந்த வாசனையை அறிந்துள்ளார். இதையடுத்து  ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்ற காத்திருக்கும் நிலையில் அந்த பயணி   பேருந்து நிலைத்தில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து பேருந்தை ஆய்வு மேற்கொண்ட போது பேருந்தில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணை நடத்தியதில் இந்த மூட்டைகள் பேருந்தில் பயணம் செய்த சண்முகம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. 

 இதைதொடர்ந்து போலீசார் ரூபாய்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள ஆறு மூட்டை குட்கா பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட சண்முகத்தையும் கைது செய்து ஓசூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைதொடர்ந்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.




Recommended For You