PUBLIC NEWS TV-கார் திருடிய இருவர் கைது, மூன்று கார்கள் பறிமுதல்.

PUBLIC NEWS TV-கார் திருடிய இருவர் கைது, மூன்று கார்கள் பறிமுதல்.

PUBLISHED:31-Oct-2017

ஓசூரில் கார் திருடிய இருவர்  கைது மூன்று  கார்கள் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கார் திருடப்பட்டு ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்,  போலீசார் தளிஇரயில்வே கேட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது  சந்தேகத்தின் பேரில் ஒரு காரில் வந்த இரண்டு  நபர்களை போலீசார் விசாரித்தனர்.  அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால்  அவர்களிடம் தீவிர விசாரணை  நடத்தியதில் தேன்கனிக்கோட்டை தாலுகா சாரகப்பள்ளி அருகில் உள்ள சொள்ளேபுரம்  பாலகுமார் வயது 24,கோவை அருகே உள்ள இடிகரை பக்கம் வடக்கு தோட்டப்பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று  கார்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று  கார்களை பறிமுதல் செய்து   பாலகுமார், கணேஷ்பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கார்களின் மதிப்பு சுமார் ரூபாய் 12  லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது.




Recommended For You