PUBLIC NEWS TV- தொழுகைக்கு சென்றவர் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு.

PUBLIC NEWS TV- தொழுகைக்கு சென்றவர் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு.

PUBLISHED:31-Oct-2017

ஓசூர் அச்செட்டிப்பள்ளியில் மர்மமான முறையில் உயிர்யிழப்பு,

 கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சமியுல்லாகான் வயது 38 இவர் அதே பகுதியில் உள்ள குந்துமாரனப்பள்ளியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் தினமும் அச்செட்டிப் பள்ளியில் உள்ள மசூதிக்கு தினமும் அதிகாலை 4 மணிக்கு செல்வது வழக்கம் , 

 அதேபோல்   இன்று அதிகாலை 4 மணிக்கு மசூதிக்கு தொழுகைக்கு சென்றுள்ளர். பின்னர் 5 மணிக்கு தொழுகைக்கு சென்றவர்கள்   சமியுல்லகான் ரத்த வெள்ளத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து   மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை  கைபற்றி கொலையா, தற்கொலையா என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.




Recommended For You