PUBLIC NEWS TV- டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு!!??.

PUBLIC NEWS TV- டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு!!??.

PUBLISHED:03-Nov-2017

ஓசூர் ராம்நகரில் டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம் சார் ஆட்சியர்  நேரில் ஆய்வு
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் மற்றும் அதன் சுற்று பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியை சார் ஆட்சியர் சந்திரகல மற்றும் வட்டாட்சியர் பூசன்குமார் நேரில் ஆய்வு செய்து முடுக்கி விட்டார்.  
 
ஓசூர் நகர பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விடுமாறு மாவட்ட ஆட்சியர்  கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், டெங்கு கொசு ஒழிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதனை சார் ஆட்சியர் சந்திரகல மற்றும்  
வட்டாட்சியர் பூசன்குமார் ஆய்வு செய்தார்.  
 
ஓசூர் ராம்நகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெற்ற ஆய்வின்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் குப்பைகள், முட்புதர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர், அங்குள்ள மக்களிடம் டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  
 
அப்போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு வீட்டின் சுற்றுப்புற பகுதியில் சுகாதாரமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.  
 

 




Recommended For You