PUBLIC NEWS TV-ஓசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ஒருவர் கைது, மற்றொரு தலைமறைவு,

PUBLIC NEWS TV-ஓசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ஒருவர் கைது, மற்றொரு தலைமறைவு,

PUBLISHED:26-Nov-2017

கிருஷ்ணகிரி

ஓசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ஒருவர் கைது, மற்றொரு தலைமறைவு,
   

ஓசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வந்த இரண்டு நடன ஆசிரியர்களிள் ஒருவர் சபரி(எ) சபரிஷ் மகளிர் போலீசாரால் கைது செயப்பட்டார் மற்றொருவர் மணி (எ) மணிகண்டன் தலைமறைவு ஆகியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பஸ்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது (29), ரங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சபரி (எ) சபரிஷ் வயது 21) ஆகிய இருவரும் ஓசூரில் நடன வகுப்பு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் 15 சிறுமிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நடனம் கற்கவரும் மாணவிகளிடம் அவர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் சைல்டு லைன் (என் -1098) அமைப்புக்கு புகார் செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு தலைவர்   ஜணனி, விசாரித்து,
அதன் பின் சிறுமிகள் அளித்த புகார் உண்மையானது என்று குற்றவாளிகள் மணிகண்டன் மற்றும் சபரிஷ் இருவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்மாரு, 

ஓசூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் செய்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடன ஆசிரியர் சபரியை கைது செய்தும், தப்பி ஓடி தலைமறைவான மணிகன்டனை தேடி பிடிக்க தனிப்படை அமைத்து தலைமறைவான குற்றவாளியை  தொடர்ந்து தேடி வருகிறர்கள்,அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




Recommended For You