PUBLIC NEWS TV- துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி உயிரிழப்பு, போலீசார் தீவிர விசாரணை.

PUBLIC NEWS TV- துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி உயிரிழப்பு, போலீசார் தீவிர விசாரணை.

PUBLISHED:27-Nov-2017

கிருஷ்ணகிரி;-

ஓசூர் அடுத்த அஞ்செட்டியில்  துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி உயிரிழப்பு  போலீஸ் விசாரணை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் விவசாயி உயிரிழப்பு.

இவர்   சுட்டுக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்வயது  (53). விவசாயி. இவர்  நள்ளிரவு நண்பர்களுடன்  உடுபராணி வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் பெருமாளின் உடல் வனப்பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்து அவரது உறவினர்கள் உடலை வண்ணாத்திப்பட்டி எடுத்து வந்தனர்.

இதற்கிடையே பெருமாள் நாட்டுத்துப்பாக்கியால் முகத்தில் சுடப்பட்டு இறந்ததாகவும், அவரது உடலை உறவினர்கள் எடுத்து வந்ததாகவும் தகவல் அறிந்து அஞ்செட்டி போலீசார் விரைந்து வண்ணாத்திப்பட்டிக்கு சென்றார்கள்.


அங்கு வைக்கப்பட்டிருந்த பெருமாளின் முகத்தில் மஞ்சள் புஷப்பட்டு இருந்தது பெருமாள் கீழே விழுந்து தவறி இறந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் நாட்டுத்துப்பாக்கியால் முகத்தில் சுடப்பட்டு குண்டு பாய்ந்து இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துமனைக்கு  அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் பெருமாள் முகத்தில் குண்டு பாய்ந்து இறந்தது உறுதிசெய்யப்பட்டது. இதைதொடர்ந்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.
 




Recommended For You