PUBLIC NEWS TV- ஊராட்சி மன்ற கட்டடத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு?.

PUBLIC NEWS TV- ஊராட்சி மன்ற கட்டடத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு?.

PUBLISHED:13-Dec-2017

கிருஷ்ணகிரி
 
தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற கட்டடத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த  தேன்கனிக்கோட்டை அருகே கண்டகானப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டடத்தை இடித்துவிட்டு, அங்குள்ள நடுநிலைப்பள்ளி அருகே புதிதாக ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையறிந்த கிராம மக்கள், தற்போது உள்ள ஊராட்சி மன்ற கட்டடம் வலுவாக உள்ளதால் அதை இடிக்கத் தேவையில்லை என்றும், பள்ளி அருகே ஊராட்சி மன்ற கட்டடம் கட்டினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்றும், கட்டடம் கட்ட வேண்டும் என்றால் கிராமத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.


 இந்த நிலையில்   நள்ளிரவுவில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தின் கதவு, ஜன்னல்கள் இடிக்கப்பட்டன. இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கட்டடத்தை இடிக்க விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற கட்டட அலுவலகம் நல்ல நிலையில் உள்ளது. இந்த நிலையில் தனிப்பட்ட நபர் ஒருவர், ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து, கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
 




Recommended For You