ராமநாதபுரம்
அதிமுக கரை வேட்டியை தினகரன் ஆதரவாளர்கள் கட்டுவதற்கு உரிமையில்லை என்று ராமநாதபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசுகையில் குறிப்பிட்டார். இவர் பேசியதாவது.
அதிமுக கொடி மற்றும் கரை போட்ட வேட்டியை அதிமுகவினருக்கு கட்டவே உரிமை உண்டு. வேறு யாரும் கட்டக்கூடாது. தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக வேட்டியை கட்டி உலா வருகின்றனர். சட்டப்படி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தினகரன் ஆதரவாளர்கள், அதிமுக வேட்டியை கட்டினால் நமது தொண்டர்கள் உருவி விடுங்கள். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். காசுக்கு ஆசைப்படும் நபர்களே தினகரன் பின் அலைகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.