PUBLICNEWSTV-செல்போன் திருடியதற்காக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை.

PUBLICNEWSTV-செல்போன் திருடியதற்காக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை.

PUBLISHED:23-Sep-2018

செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவன் அடித்துக் கொலை
 
கரூர் அருகே செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரை அடுத்த அல்லிக்கவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பாலசுப்பிரமணி. 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் அதன்பின்னர் பள்ளிக்குச் செல்லாமல் ஊரிலேயே இருந்து வந்துள்ளார்.

ஊரிலுள்ள சில வீடுகளில் பாலசுப்பிரமணி திருடி வந்ததாகவும், அதனை ஊர்மக்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்ததோடு, முனியாண்டி என்பரவது செல்போனும் மாயமாகியிருந்து.

பாலசுப்பிரமணிதான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த சிலர், அவரது வீட்டிற்குச் சென்று அவரது சகோதரி முன்னர் கட்டி வைத்து, கட்டை உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பாலசுப்பிரமணி மயக்கமடைந்துள்ளார். அவருக்கு தண்ணீர் கொடுக்க முயன்ற அவரது தங்கையையும் அவர்கள்  மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனிடயே மயக்கமடைந்த பாலசுப்பிரமணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், பாலசுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்ததோடு, அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Recommended For You