PublicNewsTv-தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த மலேசிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

PublicNewsTv-தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த மலேசிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

PUBLISHED:05-Dec-2017

கும்பகோணம்:-

மலேசிய நாட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ஜெயந்தி (வயது 56).

இவர்களது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் உள்பட 8 பேருடன் கடந்த 28-ந் தேதி சுற்றுலாவுக்காக தமிழகம் வந்தார்.

பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேற்று மாலை வந்தனர்.

கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை விடுதி அறையில் இருந்த ஜெயந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஜெயந்தியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஜெயந்தி மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறினர்.

சுற்றுலா வந்த இடத்தில் ஜெயந்தி பலியானதால் அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் பற்றி கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜெயந்தி உடலை மலேசியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

 




Recommended For You