PUBLICNEWSTV- திண்டுக்கல்லில் இறந்ததாக கூறியவர் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு..!

PUBLICNEWSTV- திண்டுக்கல்லில் இறந்ததாக கூறியவர் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு..!

PUBLISHED:06-Jan-2019

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி சாமியார்புதூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது46). தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார்.

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது வி‌ஷ வண்டு கடித்தது.

உடனே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருந்துவர்கள் தங்கவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இனையடுத்து சோகத்துடன் அவரை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

குளிர்சாதன பெட்டியில் வைத்து மாலைகள் அணிவித்தனர்.

அப்போது திடீரென தங்கவேலு விழித்து பார்த்தார்.

தூங்கி எழுந்தவர் போல தனக்கு என்ன ஆயிற்று என கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் அவரை ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து மருத்துவர்கள் சோதனை செய்தனர்.

தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




Recommended For You