மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கிய அரசு அதிமுக அரசு K.குப்பன் Ex Mla பேச்சு.!
சென்னை திருவொற்றியூர் 1வது வட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் பகுதியிலுள்ள அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணி குழுக்களுடன் ஆலோசனை கூட்டம் வட்ட செயலாளர் M.K.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla, பங்கேற்று பேசிய போது மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும், புரட்சித்தலைவி அம்மா மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வாரி வாரி வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல இதைத்தொடர்ந்து தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறார்.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு மீனவ சமுதாயத்தினர் முழு மனதோடு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அருகில் தலைமை கழக பேச்சாளர் புதுகை மு.பாண்டியன் , மேற்கு பகுதி துணைச் செயலாளர் மனோகரன் , மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் வெங்கடேசன் , வட்ட அவைத்தலைவர் லைபான் , உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.