மணலி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி 20வது வட்டம் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மணலி சின்ன மாத்தூரில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பகுதி அவைத்தலைவர் சாரதி P.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவரம் V.மூர்த்தி , பகுதி செயலாளர்கள் K.குப்பன் Ex Mla , ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 20வது வட்ட செயலாளர் சாரதி P.பிரகாஷ் செய்து இருந்தார்.
அருகில் பகுதி செயலாளர் பரமசிவம் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் G.ரவிக்குமார் , சின்னையன் , திரிபுரம் , சத்யா , ஆறுமுகம் , ராஜகோபால் , குணசேகர் , அருளப்பன் , சாந்தி உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.