ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 38வது வட்டம் நேரு நகர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீதி வீதியாகச் சென்று, பொதுமக்களை சந்தித்து ‘இரட்டைஇலை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பொதுமக்களிடம் பேசியபோது அதிமுக சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டு, வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்துக்கு சென்ற பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.ராஜேஷுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது, அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்கும்படி கோரினார்.
இதன் முன்னதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருகில் மேற்கு பகுதி செயலாளர் ஆர்.நித்யானந்தம் , ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அதிமுகவினர் என ஏராளமானோர் இருந்தனர்.