ஆர்.கே நகர் தொழிலாளர்களிடம் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வாக்கு சேகரிப்பு.!
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 47வது வட்டம் தண்டையார்பேட்டை மேட்டு தெரு இளைய முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீதி வீதியாக நடந்து சென்று, பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் ‘இரட்டைஇலை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், அதிமுக அரசு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் , அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் போன்றவற்றை பொதுமக்களிடமும் , தொழிலாளர்களிடமும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்துக்கு சென்ற பல்வேறு இடங்களில் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அருகில் பகுதி செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, ஏ.கணேசன், உள்ளிட்ட அதிமுக மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.