திருவொற்றியூர் திமுக வேட்பாளர் K.P.சங்கர் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் மணலி சி பி சி எல் காலனியில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இதன் முன்னதாக வேட்பாளர் கே.பி.சங்கருக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுகவினர் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.