ஆர்.கே நகரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..!
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 39வது வட்டம் புது வண்ணாரப்பேட்டை , செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீதி வீதியாக நடந்து சென்று, பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் ‘இரட்டைஇலை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், அங்கிருந்த இஸ்திரி கடையில் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
அப்பகுதியில் பிரச்சாரத்துக்கு சென்ற பல்வேறு இடங்களில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அருகில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.