சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கிச்சா ரமேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் A.ரமேஷ் என்ற M.A.கிச்சா ரமேஷ் 54வது வட்டத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் டார்ச் லைட் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இதன் முன்னதாக வள்ளலார் நகர் அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொடி மற்றும் டார்ச் லைட் சின்னம் கையில் ஏந்தியபடி தனது பேரணியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து திறந்தவெளி பிரச்சார ஆட்டோவில் நின்றபடி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவருடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.