PUBLIC NEWS TV - இரட்டை விரலை அசைத்து அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு..!

PUBLIC NEWS TV - இரட்டை விரலை அசைத்து அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு..!

PUBLISHED:28-Mar-2021

ரிக்க்ஷாவில் நின்றபடி இரட்டை விரலை அசைத்து அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் D.ஜெயக்குமார் 50வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

அப்போது அமைச்சர் D.ஜெயக்குமார் ரிக்க்ஷாவில் நின்றபடி சென்று இரட்டை விரலை அசைத்து பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதன் முன்னதாக வழிநெடுகிலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர்.

அவருடன் பகுதி செயலாளர்கள் A.T.அரசு , V.M.மகேஷ் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலாஜி , மாணவரணி மாவட்ட செயலாளர் S.S.K.கோபால் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.




Recommended For You