PUBLIC NEWS TV - குழந்தைகளுக்கு முத்தமிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு.!

PUBLIC NEWS TV - குழந்தைகளுக்கு முத்தமிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு.!

PUBLISHED:29-Mar-2021

குழந்தைகளுக்கு முத்தமிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் D.ஜெயக்குமார் 48வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

அப்போது வழிநெடுகிலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த தாய்மார்களிடம் இருந்த குழந்தைகளை தூக்கி முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்தார்.

இதன் முன்னதாக அமைச்சர் D.ஜெயக்குமார் மண்ணப்பன் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சாமி கும்பிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அவருடன் பகுதி செயலாளர்கள் A.T.அரசு , V.M.மகேஷ் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலாஜி , மாணவரணி மாவட்ட செயலாளர் S.S.K.கோபால் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.




Recommended For You