இஸ்திரி போட்டு கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் D.ஜெயக்குமார் 51வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த இஸ்திரி கடையில் பொதுமக்களின் பேன்ட் சட்டைக்கு இஸ்திரி போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அருகில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.