PUBLIC NEWS TV - திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் குமார் குற்றச்சாட்

PUBLIC NEWS TV - திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் குமார் குற்றச்சாட்

PUBLISHED:31-Mar-2021

திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் சுயேச்சை வேட்பாளர் N.ரமேஷ் குமார் குற்றச்சாட்டு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் N.ரமேஷ் குமார் 14வது வட்டத்துக்கு உட்பட்ட ஒண்டிகுப்பம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தொலைகாட்சி சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் குமார் கூறியதாவது தேர்தல் நேரங்களில் இலவசங்களை அறிவித்து தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தொலைக்காட்சி பெட்டிக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முதியவர்களுக்கு வீடு தேடி வந்து சேவைகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதற்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

அவருடன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் சென்று வாக்கு சேகரித்தனர்.




Recommended For You