மணமக்களுடன் இரட்டை இலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் D.ஜெயக்குமார் 53வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது மூலக்கொத்தளம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் அமைச்சர் D.ஜெயக்குமாரிடம் ஆசி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து மணமக்களுடன் ரிக்க்ஷாவில் சென்று இரட்டை விரலை அசைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அருகில் பகுதி செயலாளர்கள் A.T.அரசு , V.M.மகேஷ் , மாவட்ட மாணவரணி செயலாளர் S.S.K.கோபால் , 53வது வட்ட செயலாளர்கள் V.R.S.சக்தி ராஜேஷ் , பா.சங்கர் , ரிஸ்வான் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் சென்று வாக்கு சேகரித்தனர்.