PUBLIC NEWS TV - திருவொற்றியூர் சுயேச்சை வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.!

PUBLIC NEWS TV - திருவொற்றியூர் சுயேச்சை வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.!

PUBLISHED:01-Apr-2021

திருவொற்றியூர் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் குமாருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் N.ரமேஷ் குமார் 14வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தொலைக்காட்சி சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது சுயேட்சை வேட்பாளர் N.ரமேஷ் குமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து ஆளுயர மாலை சால்வைகள் அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய N.ரமேஷ்குமார் தொலைக்காட்சி பெட்டிக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அவருடன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.




Recommended For You