அதிமுக வேட்பாளர் குப்பன் பிரச்சாரம் - விசில் பறக்க விட்ட இளைஞர்கள்.!
சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழங்குப்பம் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் கலந்துகொண்டு பேசியபோது மீனவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்த அதிமுக அரசுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அப்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கைத்தட்டி விசிலடித்து எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என உற்சாக முழக்கம் எழுப்பினர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் புதுகை மு.பாண்டியன் , கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் S.பரமசிவம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரிணி செயலாளர் S.P.அரவிந்தன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார், இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் தாங்கல் ரவி , வட்ட செயலாளர்கள் M.K.கண்ணன் , திருஞானசம்பந்தம் உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் இருந்தனர்.