திருவொற்றியூரில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்.
சென்னை மாநகராட்சி சார்பில் வியாபாரிகளும், ஊழியர்களுக்கும் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அதிக கூட்டம் இருப்பதால் வியாபாரிகள் தடுப்புசி மையங்களுக்கு சென்று ஊசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கமும் சென்னை மாநகராட்சி இணைந்து திருவொற்றியூர் தேரடி டி.கேபழனிச்சாமி திருமணமண்டபத்தில் சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தது இந்தமுகாமை கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் வடசென்னை எம்.பி டாக்டர் கலாநிதி வீராசாமி , நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தார்.
அதிக இடவசதியுடனும் கூடுதல் பணியாளர்களுடனும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், இம்முகாமில் 300க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருகில் பகுதி செயலாளர் தி.முதனியரசு , குறிஞ்சி எஸ்.கணேசன் , ஆர்.சி.ஆசைத்தம்பி , கஜபதி , சோலையப்பன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.