திருவொற்றியூர் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.!
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மேற்கு பகுதி திமுக சார்பில் கே.வி.குப்பத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு பகுதி செயலாளருமான கே.பி.சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி , 1 கிலோ சமையல் எண்ணெய் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இதன் முன்னதாக இரண்டு கால்களை இழந்த 6 பேருக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது.
மேலும் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 5வது வட்டத்தில் வட்ட செயலாளர் கே.பி.சொக்கலிங்கம் ஏற்பாட்டில் 500 பேருக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு 5 கிலோ அரிசி , 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.
அருகில் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு , மேற்கு பகுதி அவைத்தலைவர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாள் முதல் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.