கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் 8வது வட்டம் திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்.
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் திமுக 8வது வட்ட செயலாளர் TCV.மணிகண்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு கலந்து கொண்டு டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அருகில் அவைத்தலைவர் A.சுப்பிரமணி , RS.சம்பத் , S.சந்தானம் , TTM.பாபு , அருளானந்தம் , சிவகுமார் , செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் இருந்தனர்.