திருவொற்றியூர் திமுக பகுதி சார்பில் டாக்டர் கலைஞர் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் திமுக பகுதி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நலதிட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தேரடி வீதியில் உள்ள கிழக்கு பகுதி அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு ஏற்பாட்டில் பகுதி செயலாளர் தனியரசு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு பகுதி செயலாளருமான K.P.சங்கர் கலந்து கொண்டு டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலதிட்டம் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
அருகில் அவைத்தலைவர்கள் எஸ்.முத்தையா , V.ராமநாதன் , மாணவரணி துணை செயலாளர் கவி கணேசன் , பொதுக்குழு உறுப்பினர்கள் குறிஞ்சி எஸ்.கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலர் இருந்தனர்.