சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் விஷ்ணு மகாஜான் , காவல்துறை துணை ஆணையர் ஹரி கிரண் ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதில் காவல்துறை உதவி ஆணையர் காவல் ஆய்வாளர் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.