திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையில் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அவர்களுக்கு, மருத்துவர் கலாநிதி வீராசாமி M.P இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்தினார்.
அருகில் ஆகாஷ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஏ.செல்வராஜ் குமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.