திருவொற்றியூர் டிகே.பி மகாலில் ரெகோபாத் மேனேஜிங் டிரஸ்ட்
மறைந்த கே.எஸ்.மரியசூசை அவர்களின் திருவுருவ படம் திறப்பு மற்றும் ஆறுதல் ஜெப கூட்டநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மறைந்த கே.எஸ்.மரிய சூசை அவர்களின் திருஉருவ படத்தை திறந்து வைத்தும்.
சிதம்பர முருகேசன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் மாலை அணிவித்து ரூபன் அவர்கள் விளக்கேற்றியும் விழாவை தொடங்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அந்தோணி ஆடிட்டர் , ராஜன் திரைப்பட வினியோகஸ்தர் மற்றும் நடிகர் திருமதி விஜி அன்பு நிவேதா வித்யாலயா பள்ளி தாளாளர் மற்றும் ஸ்டீபன் ஜெபக்மாரிஸ் , சங்கீததாஸ் , காட்வின் இன்பராஜ் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தியோபயஸ், திருவொற்றியூர் டிஇ எல்சி அவர்களோடு இணைந்து ஸ்டீபன்சன், வேகு சிறப்பாக நடத்தி முடித்தனர். அரிமா சங்கம் வின்கோ நகர் சங்கத்தின் சார்பாக கே எஸ் மரியசூசை அவர்களுக்கு சிறப்பு வாழ்நாள் விருது வழங்கியும் ஏழை முதியவர்களுக்கு புது துணி மணிகளையும் கொடுத்து விழாவைசிறப்பித்தனர்.