PUBLIC TV TAMIL - திருவொற்றியூரில் மக்களை தேடி மருத்துவம் முகாமை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

PUBLIC TV TAMIL - திருவொற்றியூரில் மக்களை தேடி மருத்துவம் முகாமை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

PUBLISHED:28-Oct-2021

திருவொற்றியூரில் மக்களை தேடி மருத்துவம் நடமாடும் வாகனத்தை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் முகாம்களை தொடங்கி வைத்தார். இதனை தமிழகம் எங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகிறது. 

அதேபோன்று சென்னை திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் அதீநவீன மருத்துவ கருவிகளுடன் நடமாடும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 40 வயதுக்குமேற்பட்ட பெண்களுக்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திறன் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

இதில் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு , அவைத்தலைவர் வி.ராமநாதன் , தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , வட்ட செயலாளர்கள் கே.பி.சொக்கலிங்கம் , ஆர்.சி.ஆசைதம்பி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You