வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகளை எம்எல்ஏ கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தின் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் 5வது வட்ட செயலாளர் கே.பி.சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலயத்தின் திருப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார்.
இதில் கிராம தலைவர் R.விவேகானந்தன் , செயலாளர் V.குமரேசன் , பொருளாளர் C.சந்திரமோகன் உள்ளிட்ட கிராம நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.