PUBLIC TV TAMIL - வடசென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு.

PUBLIC TV TAMIL - வடசென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு.

PUBLISHED:14-Dec-2021

திருவொற்றியூரில் காவல் துறை சார்பாக பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

சென்னை திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் தமிழகத்தில் போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கிட சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையில்

இராயபுரம் உதவி ஆணையர் உக்கிரபாண்டி திருவொற்றியூர் ஆய்வாளர் சுதாகர் அறிவுறுத்தலின்படி

பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வு ஓவியம் போட்டி நடைபெற்றது

இதில் துணை ஆணையர் சிவா பிரசாத் போதைப் பொருள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பாக ஓவியத்தை வரைந்த வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் இராயபுரம் உதவி ஆணையர் விக்ரபாண்டி திருவொற்றியூர் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பஞ்சநாதன் பதக்கங்களை மாணவ மாணவிகளுக்கு அணிவித்து கோப்பைகளை வழங்கினர்.

 




Recommended For You